*நண்பர் கைது
கோபி : கோபி அருகே உள்ள திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகரை சேர்ந்தவர் பூவேந்திரன் (27). கார்மெண்ட்ஸ் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் பூவேந்திரன் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த குபேரன் (26), என்பவருக்கு சொந்தமான ஏர்கன் துப்பாக்கியுடன் குபேரன், பூவரசன், சக்திவேல், சுரேஷ் ஆகியோர் ஏரிமேட்டில் துப்பாக்கியை வைத்து போட்டோ எடுத்தனர்.
அப்போது, பூவேந்திரன் துப்பாக்கியை கையில் வைத்து இருந்த போது, அவரது நண்பரான நல்லாம்பட்டியை சேர்ந்த நந்தகுமார் (27), என்பவர் துப்பாக்கி டிரிக்கரை அழுத்தி உள்ளார். அப்போது, துப்பாக்கியில் இருந்த சிறிய ரக தோட்டா பூவேந்திரனின் மார்பில் பாய்ந்தது.
இதில், படுகாயமடைந்த பூவேந்திரனை அவரது நண்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
