×

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சிஐஎஸ்எப் கம்பெனி போலீசார்

*ஜோலார்பேட்டையில் இருந்து பஸ்சில் சென்றனர்

ஜோலார்பேட்டை : கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த சிஐஎஸ்எப் கம்பெனி போலீசாரை கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி சக்திவேல் வரவேற்று ஏ.ஆர்.பேருந்து மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றார்.

தமிழகம் முழுவதும் 2026க்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நாள் விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படை போலீசார் உள்ளிட்ட பல்வேறு கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக சென்னை சிஐஎஸ்எப் கம்பெனி போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையிலான 89 போலீசார் என மொத்தம் 90 பாதுகாப்பு படை வீரர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் என்.சக்திவேல் மற்றும் கிருஷ்ணகிரி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் 7வது பட்டாலியன் ஏசி மகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக வந்தவர்களை வரவேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஏஆர் பேருந்து மூலம் அழைத்துச் சென்றனர்.

அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என உடன் இருந்தனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த பாதுகாப்பு படை வீரர்களை கண்ட பயணிகள் சிறிது நேரம் பதற்றம் அடைந்து பின்னர் விவரம் அறிந்து தெளிவடைந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : CISF Company ,Yelagiri Express ,Krishnagiri district ,Jolarpettai ,CISF Company police ,Chennai ,DSP ,Sakthivel ,AR ,
× RELATED கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி...