திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

 

திருத்துறைப்பூண்டி,மார்ச் 11: திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதியில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று காலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கட்டிமேடு, மேட்டுப்பாளையம் மடப்புரம், நெடும்பலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்ததால் பொதுபொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தாளடி அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் கவலையடைந்தனர்.

Related Stories: