அர்ஷ்தீப் சிங்கிற்கு அபராதம்: ஐசிசி அதிரடி

 

மும்பை: டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் இந்திய அணி பந்து வீசியது. போட்டியின் 11வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த நியூசிலாந்தின் டேரில் மிட்செல் பந்தை நேராக ஓங்கி அடித்தார். சில்லி மிட்ஆனில் அந்த பந்தை தடுத்த அர்ஷ்தீப் சிங் திடீரென டேரில் மிட்செல் மீது பந்தை தூக்கி எறிந்தார். பந்து அவரது தொடையில் பட்டதால் மிட்செல் கோபமாக பேசினார்.

இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விரைந்து வந்து மிட்செலை அமைதிப்படுத்தினார். அம்பயர்கள் அர்ஷ்தீப் சிங்கையும், மிட்செலையும் கண்டித்தனர். போட்டி முடிந்த பின்னர் மிட்செல்லிடம் தனது நடத்தைக்காக அர்ஷ்தீப் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடத்தை விதிகளை மீறியதற்காக அர்ஷ்தீப் சிங்கிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: