வேலவன் ஸ்டோர்ஸ் மகளிர் தின விழா

தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடியில் வேலவன் ஸ்டோர்ஸ் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் துறைமுக செயற்பொறியாளர் ஷேபா தேவதாஸ் பரிசு வழங்கினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். குலுக்கல் போட்டியை டாக்டர் ஜேஸ்மின், ராஜேஷ் திலக் ஆரம்பித்து வைத்தனர். மகளிருக்கான கலைநிகழ்ச்சிகளை தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய செயற்பொறியாளர் ஷேபா தேவதாஸ் துவக்கி வைத்தார். இதில் பரதநாட்டியம், மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குநர் தங்கவேல் பரிசு வழங்கினார். குலுக்கல் போட்டியில் முதல் பரிசை பெற்ற தருவைகுளத்தை சேர்ந்த அந்தோனி ரோசிக்கு தங்க நாணயத்தையும், 2வது பரிசு பெற்ற மீனாட்சிபுரத்தை சேர்ந்த அருணாவுக்கு வெள்ளி நாணயத்தையும், 3வது பரிசு பெற்ற கணேசபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்விக்கு ஷோபா செட்டையும் துறைமுக செயற்பொறியாளர் ஷேபா தேவதாஸ் வழங்கினார். இதில் அன்னபுஷ்பம் தங்கவேல், வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குநர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேலவன் ஸ்டோர்ஸ் நிர்வாகிகள் தங்கவேல், மகாராஜன், ஆனந்த் மற்றும் பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: