நன்றி குங்குமம் தோழி
*அகத்தி இலை அவித்த தண்ணீரை பருகினால் வாய்ப்புண் ஆறும்.
*காசநோய் குணமாக தினமும் அரை நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
*அத்திப் பழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு பலம் பெறும்.
*ஆஸ்துமா, மார்பு சளி தீர சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து வறுத்து சாப்பிடலாம்.
*தேங்காய்ப்பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.
*மார்பு சளி குணமாக இஞ்சி மரப்பா சாப்பிடலாம்.
*புதிய ரத்தம் உருவாக்குவதில் பீட்ரூட் கிழங்கு வலிமையானது.
*இதய நோய் குணமாக மருதம் பட்டை, செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
*கறிவேப்பிலை சாறை மோரில் கலந்து குடிக்க கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
*ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட சுறுசுறுப்பாக இருக்கலாம்.
*பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட உடல் பலவீனம் நீங்கும்.
*வறட்டு இருமல் குணமாக மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி 3 வேளை சாப்பிடலாம்.
*இளைப்பு இருமல் குணமாக விஷ்ணுகிரந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
*இருமல் குணமாக முற்றிய வெண்டைக்காயை சூப்பாக செய்து குடித்து வரலாம்.
*வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது நல்லது.
தொகுப்பு: கே.காசி, திருவண்ணாமலை.
