வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்களது மகள் இனியா (13) பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை லாவண்யா தனது பைக்கில் மகளை ஏற்றிக்கொண்டு அவர் படிக்கும் பள்ளியில் விடுவதற்காக வழக்கம்போல் சென்றார். பிரபல தனியார் குடியிருப்பு மெயின் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி சக்கரம் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் தாய், மகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
பள்ளி செல்லும்போது 8ம் வகுப்பு மாணவியும், அவரது தாயாரும் லாரி மோதி இறந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் சோகத்தையும், பொதுமக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
