சென்னை: எல்.பி.ஜி. கேஸ் நிரப்புவதற்காக சென்னையில் எரிவாயு நிலையங்களில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்களால் பரபரப்பு நிலவி வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் -ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் இயங்கும் என ஓட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சென்னையில் எல்.பி.ஜி. நிலையங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் குவிந்தனர். எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் எல்.பி.ஜி நிலையத்தில் கேஸ் நிரம்ப ஆட்டோ ஓட்டுநர்கள் குவிந்தனர். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
