கலப்படம் கண்டறியும் பயிற்சி

பழநி, மார்ச் 9: பழநியில் உள்ள தனியார் மண்டபத்தில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டறியும் பயிற்சி முகாம் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இம்முகாமிற்கு, நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.

பயிற்சி முகாமில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமை, நோய்களின் வகைகள், கண்டறியும் முறை, குற்றத்திற்கான தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: