கொள்ளிடம் வட்டாரத்தில் தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மயிலாடுதுறை, மார்ச் 9: கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் முகாம் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பயன்பெற அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் புத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமிலும் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: