கீழ்வேளூர், மார்ச் 9: நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள திரௌபதையம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் மகாபாரதக் கதைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தீமிதி திருவிழாவின் முதல் 10 நாட்கள் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.நேற்றுமுன்தினம் அம்மன் மலர் அலங்காரத்தில் அன்னப்பச்சி வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
