நெல்லை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட சிறார்கள் உள்பட 4பேர் கைது

 

நெல்லை, மார்ச் 9: நாங்குநேரியில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த இரட்டைக்கொலை சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தக்கொடூர சம்பவத்தைத்தொடர்ந்து, சிலர் சமூக வலைதளங்களில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையைத்தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசண்ணகுமார் ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஷமிகள் சிலர் குற்றவாளிகள் சிலரின் புகைப்படங்களை வைத்து கெத்து காட்டுவதாக நினைத்து பிரிவினை தூண்டும் வீடியோக்களை பரப்பி வந்தனர். இதுகுறித்து புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து எஸ்பி பிரசன்னகுமாரின் உத்தரவின், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் விஷமத்தனமான பதிவுகளை வெளியிட்டவர்களை சல்லடை போட்டுத் தேடினர். இதில் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்த இருவரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

Related Stories: