காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல் பதிவான வாக்கு எண்ணிக்கையில் 94 தொகுதிகளில் 70 தொகுதிகளில் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜென் ஜிக்களின் ஆதரவு பெற்ற இந்த கட்சி மேலும், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜபாபா5 தொகுதியிில் 4 முறை பிரதமராக இருநத சபிஎன்-யூஎம்எல் கட்சித் தலைவர் ஒலி தோல்வி அடையும் நிலையில் உள்ளார். அங்கு பாலேந்திர ஷா அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். நேபாள காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்று, 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யூஎம்எல் கட்சி 10 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
