சென்னை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
