சென்னை : ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சியில் 336-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்த்துள்ளோம். உதாரணமாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.16 கோடி குடும்பங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், 3 மணி நேரத்தில் வங்கித் கணக்குகளில் நிதி வரவு வைக்கப்பட்டது அரசின் தொழில்நுட்பச் சாதனையாகும். 5 ஆண்டுகளில் தரவுகளின் (Data) அடிப்படையில் திராவிட மாடல் அரசு திறம்படச் செயல்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவித்தார்.
