சட்டப்பேரவை தேர்தல் தேர்தல் ஆணைய குழு கேரளா வருகை

கொச்சி: பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய குழு நேற்று கேரளா சென்றது. கேரளாவில் தற்போதுள்ள பேரவையின் பதவிக்காலம் மே 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளாவில் பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் நேற்று கேரளா சென்றடைந்தனர்.

அங்கு இன்றும், நாளையும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த 2001 ஜூன் முதல் 2004 ஜூலை வரை எர்ணாகுள மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்தார். கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மலையாளத்தில் பேசிய ஞானேஷ் குமார், “22 வருட இடைவெளிக்கு பிறகு கொச்சிக்கு வருகிறோம். அடுத்த 2 தினங்களுக்கு இங்கே இருப்பேன். கேரளாவில் வௌிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தப்படும்” என்றார்.

* மே.வங்கத்தில் முன்கூட்டியே ஆய்வு
மேற்குவங்கத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் வரும் 9 மற்றும் 10ஆம் தேதி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வௌியானது. இந்நிலையில் வரும் 8ம் தேதி தேர்தல் ஆணைய குழு சட்டப்பேரவை தேர்தல் பணிகள் பற்றி ஆய்வு செய்ய மேற்குவங்கம் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: