- சென்னை மாநிலக் கல்லூரி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கலைஞர் அரங்கம்
- சென்னை
- முத்தமிழ்ஞர்
- கலைஞர்
- அரங்கம்
- கலைஞர் அரங்கம்…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை திறந்து வைத்தார். மேலும், உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். கலைஞர் அரங்கம் 60,672 சதுர அடி பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கம், நிர்வாக அலுவலகம், முக்கிய பிரமுகர்கள் அறை, கலைஞர்கள் ஓய்வு அறையுடன் கலையரங்கத்தின் தரைத்தளத்தில் 1,272 நபர்களும், முதல் தளத்தில் 800 நபர்களும் என மொத்தம் 2,042 நபர்கள் அமரக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் புகழ் பெற்ற மாநிலக் கல்லூரியில், 5.7.2022 அன்று மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி அரசு கல்லூரியில் மிகப்பிரமாண்டமான முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர் மோகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
