×

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை மூலம் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டில் 3.20 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமான பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலில் 3.20 கி.மீ கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றது.

இப்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தியாகராய சாலை சந்திப்பு, எஸ்.ஐ.டி கல்லூரி சாலை சந்திப்பு. நந்தனம் சாலை சந்திப்பு, சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு ஆகிய ஏழு முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் தேணம்பேட்டை முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 16.61 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அண்ணா சாலையின் கீழே செல்லும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையினால், இப்பாலத்தில் இருந்து வரும் அழுத்தம் சுரங்கப்பாதையை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் ஆழ்த்துளை அடித்தளம் அமைக்காமல் குறைந்த தாங்கும் திறன் கொண்ட இம்மண்ணில் ஆழம்குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றதானது.

இதற்கு தீர்வுகான மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள். ஐஐடி வல்லுநர்கள், மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு வல்லுநர்கள் ஆகியோரிடம் கலந்தாய்வு செய்து இந்த உயர்மட்ட பாலப்பணி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு முயற்ச்சிக்கு பிறகு பாலத்தின் அழுத்தத்தினை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்கள் கொண்டு வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டது. இயக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை.
கட்டுமான பகுதியில் உள்ள மண்ணின் குறைந்த தாங்குதிறன். அண்ணா சாலையை ஒட்டி அமைந்துள்ள மாம்பலம் கால்வாயினால் ஏற்படும் நீர் ஊடுருவல், மிகுதியான போக்குவரத்து நெரிசல் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பணி மேற்கொள்ளும் குறைந்த பணி நேரம் ஆகிய கடும் சவால்களால் கட்டுமான பணிகளை திட்டமிட்டவாறு நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இப்பணி ரூ.621 கோடியில் பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமானம் ஒப்பந்த முறையில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சுரங்கம் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் உயர்மட்ட சாலை ஆகும். பாலத்தின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடங்களில் கடந்து செல்லலாம். நெடுஞ்சாலைத்துறை இந்த ஆய்வின்போது துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலை சிறப்பு அலுவலர் தொழில்நுட்பம் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சத்தியபிராகஷ் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

* திராவிட மாடல் 2.0 ஒப்படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு : மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”! சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலத்தை திராவிட மாடல் 2.0வின் துவக்கத்திலேயே மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Teynampet ,Saidapet ,Chennai ,Highways Department ,Anna Salai ,
× RELATED கிண்டியில் தனியாரிடம் இருந்து...