×

கேரளாவில் மலையாளம் கட்டாயமொழியானது: மசோதாவில் கவர்னர் கையெழுத்து போட்டார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள மொழியை கட்டாயமாக்கும் மசோதா முதலில் கடந்த 2015ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் கேரள சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் மலையாள மொழி இனிமுதல் கட்டாயம் ஆகிறது. இதனால் கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயமாகும். மாவட்ட நீதிமன்றங்கள் முதல் கீழ் நீதிமன்றங்கள் வரை மொழியும், தீர்ப்புகளும் மலையாளத்தில் இருக்கும்.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Congress ,Kerala Assembly ,
× RELATED மீண்டும் பதவி ஏற்ற 3 மாதத்தில் திடீர்...