×

மியான்மரில் நீடித்த அமைதி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆதரவு

புதுடெல்லி: மியான்மரில் நீடித்த அமைதி, வளர்ச்சியை வழங்கக்கூடிய மியான்மர் தலைமையிலான மற்றும் மியான்மருக்கு சொந்தமான உள்ளடக்கிய அமைதி செயல்முறையை ஆதரிக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள சர்சோபிக் மான் இலக்கிய மைய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் இணைய வழியாக ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அவர் பேசியதாவது: அருகில் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை, கிழக்கு நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிக்கு உட்பட்ட மஹாசாகர் ஆகிய மூன்று முக்கிய வெளியுறவுக் கொள்கைகளின் சங்கமத்தில் மியான்மர் அமைந்துள்ளது. 40 கோடி மக்கள் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியா.

இந்தியாவும் மியான்மரும் பல நூற்றாண்டுகளாக ஆன்மீகம், புவியியல், மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் பன்முக ஈடுபாடு, அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாசார ஒத்துழைப்பை உள்ளடக்கியது. வளர்ச்சி ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, மியான்மருடனான எங்கள் ஈடுபாடு மக்களை மையமாகக் கொண்டது மற்றும் தேவையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதையும் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மியான்மரில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சியை வழங்கக்கூடிய, மியான்மர் தலைமையிலான மற்றும் மியான்மருக்குச் சொந்தமான ஒரு உள்ளடக்கிய அமைதி செயல்முறையை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Tags : Myanmar ,External Affairs Minister ,S Jaishankar ,New Delhi ,
× RELATED மீண்டும் பதவி ஏற்ற 3 மாதத்தில் திடீர்...