செல்வகணபதி கோயில் குடமுழுக்கு விழா

திருப்புத்தூர், மார்ச் 3: முத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஓட்டக்கோயில் செல்வகணபதிக்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி அருகே முத்தூர் கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஓட்டக்கோயில். சிவாலயத்தில் உள்ள செல்வகணபதிக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தரைதள வேலைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மார்ச் 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாகபூஜை ஆரம்பமாகி பூர்ணாகுதி நடைபெற்றது. குடமுழுக்கு நாளான நேற்று மார்ச் 2ம் தேதி காலை 7 மணிக்கு கோபூஜை மற்றும் சுமங்கலி பூஜையுடன் 2ம் கால யாகபூஜை பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடாகி சிவாச்சாரியர்கள் மற்றும் கிராமத்தார்கள் கோயிலை வலம் வந்து செல்வகணபதிக்கு குடமுழுக்கு நடத்தினர். இதில் சுற்றுப்புர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டெடுத்து சிறப்பு செய்தனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை முத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: