மதுரையில் கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

மதுரை, மார்ச் 3: மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ஜெனார்த்தனன் மனைவி மஞ்சுளா (45). இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டிரைவிங் பள்ளி நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் தெற்குவாசலை சேர்ந்த கேசவன்(30) என்பவர் ரூ.8 லட்சத்தை 2 தவணையாக கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை மஞ்சுளா தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கேசவன், மஞ்சுளா வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்று பணம் கேட்டு தொல்லை செய்கிறாயா எனக்கூறி தோசை கல்லை எடுத்து சரமாரியாக தாக்கியதாகவும், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மஞ்சுளா தனது தாய், தம்பிக்கு போன் செய்ததால் கேசவன் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: