வேப்பூர், மார்ச் 3: வேப்பூர் அடுத்த காளியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மேகலா(27). இவர் சம்பவத்தன்று காலை தனது வீட்டில் இருந்து பூலாம்பாடி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள், மேகலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
