திருக்கோவிலூர் அருகே சிறுமி பலாத்காரம் தொழிலாளி கைது

திருக்கோவிலூர், பிப். 25: திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அதே பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஏரிக்கரை அருகே இருந்த சின்ன செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் ஆழ்வார் (45, கூலி தொழிலாளி) என்பவர் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டு வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கடந்த 2 மாதமாக வெளியே சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி வயிறு வலிப்பதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து அவரது தாய் சிறுமியிடம் விசாரித்ததில் அவர் அளித்த தகவலின் பேரில் சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரேவதி, ஆழ்வார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: