ராயக்கோட்டையில் பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ராயக்கோட்டை, பிப்.28: ராயக்கோட்டை பகுதியில் பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் நல்ல சீதோஷ்ணம் நிலவுவதால், காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளைச்சலாகும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் விற்பனை சீராக நடப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் பீன்ஸ் சாகுபடி செய்கின்றனர். அரை ஏக்கர் நிலத்தில் விளைச்சல் செய்ய 2 கிலோ பீன்ஸ் விதை தேவைப்படுவதால், ஒரு கிலோ பீன்ஸ் விதை ரூ.1200 என 2 கிலோ வாங்கி நட்டுள்ளனர். நட்ட விதைகள் 15 நாட்களில் செடியாக வளர்ந்துள்ளது. செடிகள் வளர்ந்து கொடியாக படர்வதற்கு, குச்சிகளை நடும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்கப்படும் பீன்ஸ் செடிகளில், 60 நாட்களிலேயே காய் விடுகிறது. குறுகிய நாட்களிலேயே விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதால், பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40க்கு குறையாமல் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: