பெண்ணை பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜிப்சன், (27). தனியார் அறக்கட்டளையில் கள ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் பேளகொண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, ஜிப்சன் உல்லாசமாக இருந்து பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்ய ஜிப்சன் மறுப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில், ஜிப்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: