×

சொன்னாரு..! செஞ்சாரு..!! தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே!

சொன்னாரு: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்திட தமிழக அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 100 சதவீதம் தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதி அரசால் முழுமையாக பின்பற்றப்படும் என திமுகவின் 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சொஞ்சாரு: திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021ம் ஆண்டு டிச.1ம் தேதி இதற்கான அரசாணையை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு, தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர் பணியில் சேர்ந்துவிட்டு பிறகு தமிழ் கற்றுக் கொள்ளலாம் என்ற விதி இருந்தது. தற்போது பணிக்குத் தேர்வாகும் முன்பே தமிழ் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் மொழி தாளில் மட்டும் குறைந்தது 100க்கு 40 மதிப்பெண் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிகளில் சேருவது கடினமாக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 போன்ற தேர்வுகளில் ‘பொது ஆங்கிலம்’ நீக்கப்பட்டு ‘பொதுத் தமிழ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தமிழ் வழியில் பயின்ற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல், தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததன்படி, அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2024), டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசு முகமைகள் மூலம் 68,000க்கும் அதிகமான இளைஞர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1.56 லட்சம் இளைஞர்களுக்கு தமிழக அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு அலுவலகங்களுக்கு வரும் சாமானிய மக்களுடன் தமிழ் மொழியில் உரையாடி, அவர்களுக்கு தேவையான சேவைகளை விரைவாக வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. ‘தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே’ என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்தச் சட்டம் அதை உறுதி செய்துள்ளதால் தேர்வர்கள் இதனை ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

* அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும்
தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் டி.என்.பி.எஸ்.சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமின்றி, ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்ற அனைத்து மாநில அரசு தேர்வு முகமைகளுக்கும் பொருந்தும்.

* 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலை
தமிழக அரசின் எதிர்க்கால திட்டமாக தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் 75 ஆயிரம் பேருக்கு அரசு பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான பணிகள் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags : Sonnaru ,Senchararu ,Tamil Nadu ,M.K. Stalin ,DMK ,Tamils ,Tamil ,Nadu ,government ,Sonchararu ,
× RELATED சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில்...