×

41 பேர் பலியான அதே ஊரில் மீண்டும் ஒரு சம்பவம் கரூர் தவெக கூட்டத்தில் கொடி எரிந்ததால் பரபரப்பு

கரூர்: 41 பேர் பலியான கரூரில் நேற்று நடந்த தவெக கூட்டத்தில் கொடி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பேச்சாளர் காயமடைந்தார். கரூர் 80 அடி ரோட்டில் தவெக 3ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டம் தொடங்கும்போது நேற்று மாலை மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவு க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், ராஜ்மோகன், ஜெகதீஷ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, மழை குறுக்கிட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலியை தலைக்கு பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். இந்த சூழலில், மேடையின் வலது புறம் நடப்பட்டிருந்த தவெக கொடிக் கம்பம் மின் கம்பி மீது உரசியதில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அந்தக் கொடிக்கம்பம் சாய்ந்து பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் நெற்றியின் மீது விழுந்தது. இதில் அவர் காயமடைந்தார். பின்னர் உடனே ஜெகதீஷ் பாண்டியன் தனது காரில் ஏறி கிளம்பி சென்றுவிட்டார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் 72 நாட்கள் வீட்டில் முடங்கிய அக்கட்சியின் தலைவர் விஜய், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, கடந்த 2 மாதமாகதான் ஈரோடு, சேலம், வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்து உள்ளார். தற்போது, மீண்டும் கரூரில் நடந்த கூட்டத்தில் கட்சிக் சரிந்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்த்த அக்கட்சியினரே, கரூருக்கும் தவெகவுக்கும் நேரம் சரியில்லை போல என கமெண்ட் அடித்தபடி சென்றனர்.

Tags : Karur Thaveka ,Karur ,Thaveka ,inaugural ,
× RELATED சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில்...