பெங்களூரு தனியார் பங்களாவில் தமிழக கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: 2 பேர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் பங்களாவில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து 19 வயது கல்லூரி மாணவி அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘பெங்களூரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன்.

ஜன.26ம் தேதி முதல் ஒரு வாலிபருடன் சமூக வலைதளத்தில் தொடர்பு ஏற்பட்டது. பிப்.14ம் தேதி கல்லூரி முடிந்த பிறகு எனது சமூக வலைதள நண்பருடன் விருந்துக்கு சென்றேன். அதன் பிறகு ஜக்கூருவில் உள்ள தனியார் வில்லாவுக்கு பார்ட்டிக்கு வரும் படி அவன் அழைத்தான். அப்போது நள்ளிரவு 1.15 மணிக்கு பங்களாவுக்கு சென்றேன். அங்கு எனது ஆண் நண்பன், அவனுடைய நண்பன் இருந்தனர்.

அப்போது இருவரும் சேர்ந்து எனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தனர்’ என குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் வாலிபர்கள் இருவரும், கல்லூரி மாணவி, எங்களிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். மேலும் தன்னிடம் உள்ள வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றுவேன் என்றும் மிரட்டியதாக புகார் அளித்துள்ளனர். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: