டெல்லி: யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் (பிப்.24) அவகாசம் நிறைவடையவிருந்த நிலையில், பிப்.27 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுகளுக்கு (Civil Services Examination) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை 6 மணியுடன் விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி ஏற்கனவே வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) வரும் மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் (Mains) ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
