தமிழ்நாட்டில் SIR மூலம் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் அர்ச்சனா பட்நாயக்

சென்னை : தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2025ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.

ஆண்கள்: 2,77,38,925,

பெண்கள்: 2,89,60,838,

மூன்றாம் பாலினத்தவர்: 7,671.

வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207

பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் form 6 மூலம் ஏற்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை: 27,53,796.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான டிச.19 முதல் பிப்.10 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. இதனிடையே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட விண்ணப்பிக்கலாம் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை //voters.eci.gov.in, //electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: