×

கூட்டணி கதவுகள் அடைப்பு தனித்து நிற்பாரா ராமதாஸ்

பாமகவில் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையிலான விரிசல் கட்சியை இரண்டாக்கியது. சின்னத்தையும் தன்வசமாக்கி தேஜ கூட்டணியில் முந்திக் கொண்டு ஐக்கியமான அன்புமணி தனக்கான இடத்தை அங்கு தக்கவைத்தார். அதேவேளையில் ராமதாஸ் தரப்பில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக மட்டுமே தொடர்ந்து கூறிவந்தனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் சோர்வடைந்தனர். இதனிடையே திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாக குழு கூடி இரண்டரை மணி நேரம் கூட்டணி தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டது. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த சேலம் எம்எல்ஏ அருள், வெற்றிபெறும் கூட்டணியில் செல்வோம். பாமகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. 234 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது என்றார்.

அவரது இத்தகைய கருத்து மூலம் நேற்றைய அவசர தலைமை நிர்வாக குழு கூட்டத்திலும் கூட்டணி முடிவாகாத நிலையைத்தான் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தேஜ கூட்டணியில் சேர ராமதாஸ் எடுத்த முயற்சிக்கு மகன் அன்புமணி முதல் தடைக்கல்லாக இருக்க கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து தவெகவுடன் பேசியும் எந்த பிடியும் கொடுக்கப்படாத நிலையில் திமுக கூட்டணி இணையலாம் என்ற கருத்துகள் பெரும்பாலான நிர்வாகிகளிடம் மேலோங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் திமுக தனது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகளும் மிகமிக குறைவு என்பதால், கூட்டணியை உடனே அறிவிக்க மூத்த நிர்வாகிகள் ராமதாசிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இல்லாவிடில் அன்புமணி களமிறக்கும் வேட்பாளர்களை மட்டுமின்றி பாமகவுக்கு செல்வாக்குமிக்க தொகுதிகளில் தனித்து நிற்கும் நிலைக்கு ராமதாஸ் அணி தள்ளப்பட வாய்ப்புள்ளது. இதனால்தான் 234 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக அருள் கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Ramadoss ,Anbumani ,PMK ,Teja alliance ,Ramadoss' ,
× RELATED மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க...