TAMIL NADU LEGISLATURE – A JOURNEY IN LEGISLATING & POLICY MAKING என்ற காலப்பேழை புத்தகத்தை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்!!

சென்னை : சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் இன்று (20.2.2026) தலைமைச் செயலகத்தில், இந்து குழுமத்தின் வெளியீடான TAMIL NADU LEGISLATURE – A JOURNEY IN LEGISLATING & POLICY MAKING என்ற காலப்பேழை புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமுமிக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பல்வேறு முக்கியமான சட்டமுன்வடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1939-இல் ஆலயப் பிரவேசச் சட்டம், 1939-இல் விற்பனை வரிச் சட்டம்,

1947-இல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், 1989-இல் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சிந்தையில் உதித்த திட்டமான பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிப்பதற்கான சட்டம்; மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என காலத்தால் நிலைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் 1967-இல் சென்னை மாநிலம் என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் என இவற்றை நினைவுகூரும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அரியவகை புகைப்படங்கள், பேரவை நடவடிக்கைக் குறிப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கை குறித்த விவரங்கள் என ஒன்பது அத்தியாயங்களில் இந்து குழுமத்தால் “Tamil Nadu Legislature: A Journey in Legislating and Policy Making” என்ற தலைப்பில் காலப்பேழை புத்தகம் (Coffee Table Book) வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் இன்றையதினம் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

Related Stories: