சென்னை: பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், ‘‘புதிய பள்ளி வாசல்கள் மற்றும் தேவாலங்களை கட்டுவதற்கும் ஏற்கனவே வழிபாட்டில் உள்ள பள்ளி வாசல்கள், தேவாலங்களை சீரமைத்து புதுப்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களிடம் தடையில்லா சான்று பெறுவதில் மத சிறுபான்மையினர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
