திருமணம் ஆகாத வாலிபர் தற்கொலை

திருச்சி, பிப்.20: திருச்சி, பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). சென்டரிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது.சில நாட்களாக ராஜ்குமார் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

கடந்த 16ம் தேதி ராஜ்குமார் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில், இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் கடந்த 18ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து எ.புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: