திருச்சி பிப்.21: கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பிப்.19ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவதானம் அருகே போதை மாத்திரை விற்ற 17 வயது சிறுவனை கோட்டை போலீசார் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவனிடம் இருந்து 30 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
