லால்குடி அரசு கல்லூரியில் ரூ.7 கோடியில் புதிய கட்டிட பணி

லால்குடி, பிப்.18: லால்குடி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் 17 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அடிக்கல் நாட்டினர். திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் 17 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு 17 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிட பணிகளை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் மஞ்சுளா தேவி, சகாயராஜ், மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: