இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் அல்லது மம்தாவை தலைவராக்க வேண்டும் : உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தல்

மும்பை : இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் அல்லது மம்தாவை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளிதழில் இந்தியா கூட்டணி குறித்து இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் “இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேறு ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: