டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை பதவிக்காலம் ஏப்.2ல் நிறைவடைகிறது. பிப்.26 ல் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள். மார்ச் 6ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மனுவை வாபஸ் பெற மார்ச் 9ம் தேதி கடைசிநாள் ஆகும். மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
