டெல்லி: சிறையில் உள்ள இம்ரான்கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் 14 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி, ஆஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், ஆலன் பார்டர் கடிதம் அனுப்பியுள்ளனர். இம்ரான்கான் விரும்பும் தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கவேண்டும், கண்ணியத்துடன் நடத்தவேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.
