- சீர்காழி சட்டைநாதர் கோயில்
- சீர்காழி
- சீர்காழி திருஞானசம்பந்தர் இசைப்பள்ளி
- மகா சிவராத்திரி
- சட்டைநாதர் சுவாமி கோயில்
- தருமபுர ஆதீனம்
- சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்
- மும்பை
- தில்லி
- கேரளா
- பெங்களூர்
- சென்னை
- வேலூர்
- பிறகு நான்
சீர்காழி, பிப்.18: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சீர்காழி திருஞானசம்பந்தர் இசைப்பள்ளி சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மும்பை, டெல்லி, கேரளா, பெங்களூர், சென்னை, வேலூர், தேனி, மயிலாடுதுறை, கோவை, சீர்காழி என பல்வேறு பகுதிகளிலிருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பக்க வாத்தியங்களுடன் வருகை தந்து நாட்டிய நிகழ்ச்சி வழங்கினர்.
நிகழ்ச்சியை பாவை கலைச்சொம்மல் தருமை சிவா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர்களுக்கு திருவருட்பிரசாதம் சான்றிதழ் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி விழா குழுவினர்கள் தலைவர் முத்துக்கருப்பன், உப தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் நடராஜ சட்டையப்பன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சத்ருகன்குமார், செய்திருந்தனர்.
