×

வேதாரண்யம் நகராட்சியில் ரூ.6.52 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணி துவக்கம்

வேதாரண்யம், பிப்.18: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி சார்பில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் அனைத்து வார்டுகளிலும் உள்ள தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை மேம்பாடு செய்யும் பணியினை நகர மன்ற தலைவர் புகழேந்தி துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தோப்புத்துறை முதல் ஆறுகாட்டுத்துறை வரை செல்லும் தார்சாலை பணியை துவக்கி வைத்தார். மேலும், வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள 43 சாலைகளை மேம்பாடு செய்யும் பணிகள் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, தோப்புத்துறை இந்து நற்பணி மன்ற தலைவர், சோம வெங்கட்ராமன் முன்னாள் தலைவர் கோவிந்தராஜன்நகராட்சி உதவி பொறியாளர் நித்யா தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ,அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகராட்சியில் இதுவரை இல்லாத அளவு ஒரே வாரத்தில் மட்டும் 52 சாலையை மேம்பாடு செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது எனவும், இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் நகர மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்தார்.

 

 

Tags : Vedaranyam Municipality ,Vedaranyam ,Nagapattinam district ,Pugazhenthi ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்