விராலிமலை, பிப்.16: விராலிமலை அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவரை மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரூபி கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட மதுவிலக்கு போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விராலிமலை அடுத்துள்ள கோமங்களம் பகுதியில் போலிஸர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கணபதி என்பவர் அவரது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்து அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்கு இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
