×

கந்தர்வகோட்டை அருகே பள்ளி முப்பெரும் விழா

கந்தர்வகோட்டை, பிப்.16: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள அருள்மாரி மெட்ரிக் பள்ளியில் 41வது ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் இலக்கியமன்ற நிறைவு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா உள்ளடங்கும். பள்ளி மாணவி ரெணுகா ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சி முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் தலைமையிலும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் ராஜரெத்தினம் ஆண்டறிக்கை வாசித்தார்.

ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் (ஓய்வு) தமிழரசு, மற்றும் ஆசிரியர் ராஜமாணிக்கம், மருத்துவர் சுதர்ஷனன் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து முன் ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகிகள் கருப்பையன், வசந்தகோகிலம் கருப்பையன், பள்ளி நிர்வாக அதிகாரி செந்தில்நாதன் செய்து இருந்தனர். அபிநயா ஸ்ரீ நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

 

Tags : Kandarvakota ,41st Anniversary Ceremony ,Arulmari Metric School ,Kandarvakota, Pudukkottai District ,Renuka Sri ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்