×

விராலிமலை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்

விராலிமலை, பிப்.16: விராலிமலை அருகே பொலிரோ ஜீப்பில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுரைக்கு விராலிமலை வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி அருகே வாகன தணிக்கையில் போலிஸார் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் பின் இருக்கையில் 400 கிலோ குட்கா மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்த பிஷேஸ்வர்(20) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய பொலிரோ காரை போலிஸார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Viralimalai ,Assam ,Karnataka ,Madurai… ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்