×

சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி விழா

சீர்காழி, பிப்.16:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி ராஜராஜேஸ்வரி என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டும், அம்மனை தேரில் வைத்து இழுத்துக்கொண்டும் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை சென்றடைந்தனர்.

அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அங்காள பரமேஸ்வரி வேடமணிந்து மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

 

 

Tags : Shivaratri ,Angala Parameswari Amman Temple ,Sirkazhi ,Sirkazhi, Mayiladuthurai district ,Maha Shivaratri ,
× RELATED சிவராத்திரியை முன்னிட்டு தரிசனத்திற்கு வைக்கப்பட்ட லிங்கம்