- குட்டலம்
- குத்தலம்
- நிவேதமுருகன் எம்எல்ஏ
- அருகில் வட்டனச்சினார்குடி
- மயிலாடுதுறை மாவட்டம்
- குட்டலம் ஊராட்சி ஒன்றியம்
- கோமல் ஒரட்சி
- வடனாச்சினார்குடி
- மாதகோ
குத்தாலம், பிப்.16: குத்தாலம் அருகே வடநச்சினார்குடி கிராமத்தில் ரூ.15.5 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை நிவேதா முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்,கோமல் ஊராட்சி வடநச்சினார்குடி மாதாகோவில் தெருவில் 2025-26 ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எழுமகளூர் ராஜா தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட், இளைஞர் அமைப்பாளர் கார்த்திகேயன், தகவல்களை ஒருங்கிணைப்பாளர் சரவணன், ஒப்பந்ததாரர் ராஜசேகரன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், துரைராஜ், மில்லர்,அலெக்ஸ் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
