குளித்தலை, பிப். 16: அய்யர்மலை பகுதியில் வாகனங்களில் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டும் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர் மாவட்டம் குளித்தலை – மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிகளவு சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது முன்னாள் செல்லும் வாகனங்கள் மீதும், சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும் பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி குளித்தலை போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் குளித்தலை நெடுஞ்சாலை அய்யர்மலை பகுதியில் சாலையில் சென்ற டிராக்டர், டிப்பர் டாரஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பின்னால் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கரை போலீசார் ஒட்டினர்.
