கரூர், பிப். 16: கரூர் வஉசி அரசு உதவி பெறும் பள்ளியில் மாறுவேடப் போட்டி நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி அருளண்டோ தாஸ் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்வில், பள்ளிக்குழு தலைவர் சோபியா ரூவினா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ஜான்சன் ஜெபராஜ் மற்றும் ஆசிரியர்கள் கீதாபாய், பத்மினி, சுதாகர் ஆகியோர் செய்திருந்தார்.
