பொன்னமராவதி,பிப்.14: பொன்னமராவதி பகுதியில் இன்று 14ம் தேதி வழக்கம் போல மின்விநியோகம் இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொன்னமராவதி பகுதியில் உள்ள கொன்னையூர், மேலத்தானியம், நகரப்பட்டி ஆகிய துணை மின்நிலையப்பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று 14ம் தேதி சனிக்கிழமை காலை 6மணி முதல் காலை 8மணி வரை இரண்டு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு பொன்னமராவதி பகுதியில் வழக்கம் போல மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
